ஆண்டு முழுதும் என்னை அரவணைத்து வந்த
அப்பா
உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய்
அதிசயமாய் வழி நடத்தி வந்த
அன்பை
எண்ணி நன்றி சொல்லுகிறேன் - 2
நடத்தி
வந்தீரே நடத்தி வந்தீரே
நன்றி
சொல்லி துதிக்கிறேனையா
சுமந்து
கொண்டீரே தோளில் சுமந்து கொண்டீரே
உள்ளம்
உணர்ந்து துதிக்கிறேனையா - (2)
1. தடைகள்
வந்த போதெல்லாம்
தடைகள்
நீக்கும் தெய்வமாய்
எனக்கு
முன்னே சென்றவர் நீரே
தாங்க
முடியாத பலவீனம்
தாக்க
எதிர்த்து வந்த போது
தாங்கிக்
கொண்ட தெய்வம் நீரே - 2 - நடத்தி
2. தனித்து
நின்ற போதெல்லாம்
தவித்து
நின்ற போதெல்லாம்
தகப்பனாக
தேடி வந்தீரே
வெறுமையாய்
போகாமலும்
வெட்கப்பட்டு
போகாமலும்
வெற்றிச்சிறந்து
வாழவைத்தீரே - 2 - நடத்தி
3. வாக்கு
தந்த தெய்வமாய்
வாக்கு
மாறா நேசராய்
வழிகள்
எல்லாம் கூட வந்தீரே
வல்ல செயல்கள்
கண்டதால்
நல்ல கிருபை
பெற்றதால்
நன்றியோடு
துதிகள் செலுத்துவேன் - 2 - நடத்தி
காலமெல்லாம்
என்னை கரம் பிடித்து நடத்தும்
அப்பா உந்தன் அன்பை நினைக்கிறேன்
அற்புதமாய் அதிசயமாய் வழி நடத்தி வந்த
அன்பை எண்ணி நன்றி சொல்லுகிறேன் - 2
- Pas. Stephan Arul Raj
No comments:
Post a Comment