நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே
எத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரே
எல்லையில்லா கிருபையால் என்னை காத்து வந்தவரே
கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்ல
ஆனாலும் உங்க கிருபை எனக்கு
போதுமே
அனுதினம் உங்க தயவு எனக்கு
வேணுமே - நன்றி சொல்லி
1. கண்ணிருந்தும்
குருடனாய் அலைந்து திரிந்தேனே
கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே
- 2
கல்வாரி இரத்தத்தினால்
சொந்தமாக்கிக் கொண்டவரே - (2)
கன்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீரே
கண்மணிப் போல் காத்து என்னை நடத்தி வந்தவரே
- கையிலேயும்
2. சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும்
உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும்
- 2
சொந்தமாக்கத்
தேடி வந்தீர் சத்தியத்தால் மீட்டுக் கொண்டீர் - (2)
உங்க பிள்ளையாய் என்னை வாழ வச்சவரே
உம்மையே உயர்த்தி தினம் பாடவச்சவரே - கையிலேயும்
3. பெலத்த கரத்துல
நானும் அடங்கியிருப்பேனே
உங்க சொல்ல கேட்டு தா நானும் தினமும் நடப்பேனே
- 2
எண்ணில்லாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே
- (2)
உங்க தோளில் சுமந்து என்னை காத்து வந்தவரே
உங்க வார்த்த
சொல்ல என்ன ஓட வச்சவரே - கையிலேயும்
- Pr. Jacob Arul
https://www.youtube.com/watch?v=Z6r6981zhaI
No comments:
Post a Comment