நானும் என் வீட்டாருமோ
கர்த்தரையே
சேவிப்போம் அல்லேலூயா
1. உளையிலே அமிழும் போது
தூக்கிய தேவனை துதி செய்வேன்
வழியிலே அழிந்திடாமல்
காத்த தேவனை ஆராதிப்பேன்
2. கர்த்தர் எனக்கு நன்மை செய்தார்
களிகூர்ந்து நானும் பாடுவேன்
கிருபையை நம்பிடுவேன்
கிருபையின்
தேவனை ஆராதிப்பேன்
3. உன்னத தேவன் ஊழியம் தந்தார்
உண்மையாய் செய்ய பெலனும் தருவார்
உள்ள நாள் முழுதும் உழைப்பேனே
உயிர் தந்த ஜீவ
தேவனுக்கே
No comments:
Post a Comment