நித்தியா இவ் ஆலயத்தில் சேர் ஐயா

நித்தியா இவ் ஆலயத்தில் சேர் ஐயா இதில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

316. இராகம்: பைரவி                              திரிபுடைதாளம் (474)

 

                             பல்லவி

 

          நித்தியா, இவ் ஆலயத்தில் சேர், ஐயா;-இதில்

          நேசமாய் வந்தோர்க் கருள் கூர், ஐயா,

 

                             அனுபல்லவி

 

            பெத்த லேம் பதிக் கிறைவா, பேச அரிதான திரு

            சத்ய மறை பரவும்[1] சுவாமி ஏசு ராஜன் எனும் - நித்

 

                             சரணங்கள்

 

1.         சத்திய பரமண்டல வாசனே-பரி

            சுத்தர் செய்யும் தோத்திரத்தில் நேசனே

            பத்தர்கள் இயற்று பவ நாசனே,-இந்தப்

            பார் இருள் அகற்றும், பிரகாசனே

            சத்துரு தசை, உலகம் மெத்தவும் வருத்த நொந்து

            கத்தும் அடியார்க்கு உன்தன் சித்தம் திரங்க என்றும்

            பத்து நெறியும் கடந்து பித்தராய் பிழைத்த எங்கள்

            பாவமும் அதால் விளைந்த சாபமும் தொலைக்க வந்த - நித்

 

2.         மதி இல்லாத எங்களைப் பாராட்டியே, பொல்லா

            மானிடர் பிழைக்க அருள் காட்டியே,

            சதிசெய் அலகை வஞ்சம் ஓட்டியே,-உன்தன்

            சபைக்குக் கிருபை முடி சூட்டியே

            கதியும் அற இழந்த கடையானோர் உன் பதத்தின்

            ததி இதுவாக வந்து தங்குதலால் ஆதரிப்பாய்!

            மதியும்[2] பதத்தினில் இரவியும்[3] தாரகைக்[4] கணம்

            துதி செய் சிரத்தணிந்த துய்ய சபை போற்றும் தேவவே - நித்

 

3.         தந்தை சுதன் ஆவியர்க்குத் தோத்திரம்-ஆ

            னந்த சதா காலங்களும் பாத்திரம்;

            விந்தை மறையே நமது நேத்திரம்[5],-வி

            ளங்கும் ஒளியாக வந்த சூத்திரம்;

            சொந்தமாய் இந்நாட்டிலுள்ள சுத்த சுவிசேஷ சபை

            சொன் மறையின் ஊழியர் எச்சோதனை தனக்கும் தப்பி

            தந்த மறை சத்தியத்தில் தாபரிக்க ஆதரிப்பாய்;

            சந்ததம் துதி உமக்கே, ஸ்வாமி! ஏசு ராஜன் எனும் - நித்

 

- காபிரியேல் உபதேசியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] கூறும்

[2] சந்திரன்

[3] சூரியன்

[4] நட்சத்திரக்கூட்டம்

[5] கண்மணி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு