பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம்
பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம்
அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார்
பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திடச் செய்தார்
பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும்
வேளை
பரலோக தேவதூதர் இறங்கி வந்திடும்
வேளை - 2
1. திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவது
புது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ்வது
ஓஓஓ
உறவுகள் பல உண்டு
இதுபோல எது உண்டு
மன விருப்பங்களை நிறைவேற்ற வந்த நல்லுறவு
(மணமகன்-மணமகள்)
நீங்கள் இருவர்
உருவாக்கப் போகும் இந்த உறவு
பரலோக
தேவன் தரும் ஆசீர்வாதத்தால்
வாழ்ந்திடுவீர் - 2 - பரமனின்
2. மண வாழ்வு என்பது
மணம் நிறைந்த நல்ல வாழ்வு
மன்னன் இயேசுவை தலையாக கொண்ட நல்வாழ்வு
ஓஓஓ
அன்பும் புரிதலும் குடும்ப வாழ்வில் இருந்து
விட்டால்
சந்தோசத்திற்கும்
நிம்மதிக்கும் குறைவில்லை
மணமகன்-மணமகள்
நீங்கள் இருவர்
இந்த
கருத்தை புரிந்து கொண்டாலே
உங்கள்
வாழ்க்கை என்றுமே நல்லறமாக இனிக்குமே - 2 - பரமனின்
- SIS. JENI JEBARAJ
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment