நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

            கருத்தோடு நன்றி சொல்கிறேன் - 2

            என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்

            நாள்தோறும் காத்து வந்தீரே

            என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்

            நாள்தோறும் காத்து வந்தீரே - 2

 

                        நன்றி நன்றிபலி செலுத்தியே

                        நாதன் இயேசுவையே பாடுவேன்

                        கோடி நன்றிபலி செலுத்தியே

                        ஜீவன் தந்தவரை பாடுவேன் - 2

 

1.         பாவியாக நான் வாழ்ந்து

            பாவம் செய்த நாட்களிலும்

            நாள்தோறும் காத்து வந்தீரே

            நான் உம்மைவிட்டு தூரம் சென்று

            துரோகம் செய்த நாட்களிலும்

            நாள்தோறும் காத்து வந்தீரே - 2

 

2.         நான் திக்கற்று துணையின்றி

            திகைத்திட்ட நேரத்தில்

            துணையாக தேடி வந்தீரே

            நான் துக்கத்தால் மனம்நொந்து

            மடிகின்ற நேரத்தில்

            மகன் என்னைத் தேடி வந்தீரே

 

3.         நான் மனதார நேசித்த

            மனிதர்கள் மறந்தாலும்

            மறவாத நேசர் நீரையா

            சூழ்நிலைகள் மாறிட்டாலும்

            மாறிடா உம் கிருபையாலே

            நாள்தோறும் தாங்கினீரையா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு