நித்தம் நித்தம் உந்தன் பாடல் பாட வேண்டும்
நித்தம் நித்தம் உந்தன் பாடல் பாட வேண்டும்
புத்தம் புது
வார்த்தை
என்னில்
பெருக வேண்டும்
உம்மைப்
போல யாருமில்லை
பாரிலெங்கும் காணவில்லை
பெரியவர்
என்றென்றும் வல்லவர்
நல்லவர்
நீர் என்றும் என்னவர்
1. நட்சத்திரங்கள்
கையிலேந்தி
குத்து
விளக்குகள் நடு உலாவும்
தேவனே
எங்கள் இராஜாவே
மார்பருகே பொற்கச்சை கட்டி
முகமே வல்லமை சூரியனாக உள்ளவரே
2. கண்கள்
அக்கினி ஜுவாலையாக
பாதம்
உலைகள வெண்கலமாக
இருப்பவரே
எங்கள் இராஜாவே
சத்தம்
பெருவெள்ள இரைச்சல் போல
வாயில்
கருக்குள்ள
பட்டயத்தோடு
உள்ளவரே
3. மரித்தும்
உயிர்த்தும் சதா காலமும்
உயிரோடிருந்து
ஆளுகை செய்யும்
தேவனே
எங்கள் இராஜாவே
மரணம்
படு பாதாளம் என்று கையில்
உரிய
திறவுகோல்கள் உள்ளவரே
- John & Vasanthy
https://www.youtube.com/watch?v=COwnL2jD3VQ
Comments
Post a Comment