நான்
வித்தியாசமானவன்
இயேசு
என்னை இரட்சித்தார்
என் பாவங்களெல்லாம்
மன்னித்தார் இனி வாழ்வது நானல்ல
இயேசு எனக்குள் வாழ்கிறார்
1. ஜெபம் பண்ணாமல்
இருக்க முடியாது
வேதம் வாசிக்காமல்
இருக்க முடியாது
பாவம் செய்ய முடியாது
பொய் பேச முடியாது
2. இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது
எனக்காக வாழ முடியாது
சும்மா இருக்கவும் முடியாது
3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
இயேசுவை உலகிற்கு நான் காட்டிடுவேன்
இயேசுவுக்காக
வாழ்ந்திடுவேன்
இயேசுவை உயர்த்தி காட்டிடுவேன்
No comments:
Post a Comment