07 August 2024

நீங்கா நினைவுகளை மனதில்

நீங்கா நினைவுகளை மனதில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நீங்கா நினைவுகளை மனதில்

                        நான் வைத்திருப்பேன்

                        காலம் மறைந்தாலும் இதை நான்

                        என்னில் தைத்திருப்பேன்

 

1.         வாழ்க்கை துவங்கி

            கையில் ஒன்றும் இல்லாமல்

            கண்கள் கலங்கின நினைவுள்ளதே

            நினைப்போர் அணைப்போர்

            என்ற யாரும் இல்லாமல்

            ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே

 

                        மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்

                        கதறி வாழ்க்கை போதும் என்றேன்

                        எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்

                        இதுவா வாழ்க்கை போதும் என்றேன்

 

            உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்

            மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்

            மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்

            இதுவே போதும் என்பேன்

 

2.         கடினம் தோன்றும் சில நிமிடங்களில்

            உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்

            நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்

            உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்

 

                        மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே

                        நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே

                        மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே

                        நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே

                        என் வாழ்வினில் இது மட்டுமா ?

 

            கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்

            நினைவாகும் ஓர் நாள் வருமே

            அந்நாள் எனக்காய் நீர் தரும் அனைத்தும்

            உலகம் கண்டு வியந்திடுமே

 

            உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்

            மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்

            மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்

            இதுவே போதும் என்பேன்

 

 

 

- Giftson Durai

 

 

https://www.youtube.com/watch?v=N9UU6_290Aw

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...