இயேசுவை நீ அறிவாயே பாரத தேசமே - 2
பாவத்தின் பரிகாரியை
லோகத்தின் ரட்சகரை
அவர் அன்றி வேறொரு தெய்வம் பூமியில் இல்லையே
அவர் போல சிலுவையில் மரித்தவர் எவரும் இல்லையே - இயேசுவை நீ
1. “ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்”
பாரதியும் ஏசுவை அறிந்து
கவியும் பாடினாரே - 2
“மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!”
கண்ணதாசனும் ஏசுவை அறிந்து
காவியம் எழுதினாரே - 2
“நசரேயன் ஏசுவின் நாட்களில் நான்
அங்கே வாழ்ந்திருந்தால்
அவர் பாதத்தை கண்ணீரால் அல்ல
இதயத்தின் இரத்தத்தால் கழுவியிருப்பேன்” - 2
விவேகானந்தரும் ஏசுவை அறிந்து கூறியது - 2 - இயேசுவை நீ
2. “இயேசு ஊழியம் கொள்ள வராமல்
ஊழியம் செய்திட வந்தாரென்று”
ஐடா ஸ்கடரும் ஏசுவை அறிந்து
தன்னை அர்ப்பணித்தார் - 2
“இந்திய பெண்களை மாற்றி உயர்த்திட
இயேசுவை தவிர யாரும் இல்லை”
ராமாபாயும் ஏசுவை அறிந்து
சொல்லிய வார்த்தை இதே - 2
“கிறிஸ்து இயேசுவை ஒவ்வொரு நாளும்
மாறுபட்ட வேடத்தில் பார்த்தேன்
ஒவ்வொரு மனிதரில் இயேசுவை பார்த்து
அவருக்கே தொண்டு செய்கிறேன்” - 2
அன்னை தெரேசாவும் ஏசுவை அறிந்து கூறியது - 2 - இயேசுவை நீ
- Sherwin Joshua
https://www.youtube.com/watch?v=zinV1cmXLbU
No comments:
Post a Comment