உம்மை விட்டு தூரம் சென்றேன்

உம்மை விட்டு தூரம் சென்றேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   உம்மை விட்டு தூரம் சென்றேன்

                        வழி மாறி நான் ஓடினேன்

                        துணை வேண்டி நான் தேடினேன்

                        நீரின்றி நான் வாடினேன்

 

1.         கண் மூடி மன்றாடினேன்

            உம் தயை வேண்டினேன்

            உமை நாடினேன் - 2

 

                        கல்வாரியில் நீர்

                        என் பாவம் போக்க

                        உம் ஜீவன் ஈந்தீர்

                        என் அன்பே

                        என் நிந்தை மேலே

                        தம் சிந்தை வைத்த

                        மா விந்தை ஏனோ

                        என்னுயிரே - 2

 

            நான் உம் மடி சேரவே

            நீர் இப்புவி சேர்ந்தீரே

            உம் நீதி எனதாகவே

            என் பாவம் உமதானதே

 

                        எனக்காக பலியானீரே

 

2.         உம் அருகாமை எனை சேர்க்கவே

            என் தூரம் நீர் ஏற்றீரே

            என் நோய்கள் குணமாகவே

            எனக்காய் நீர் ரணமானீரே - 2

 

            உம் நேசம் எனை சூழவே

            உயிர் வாழ்கிறேன்

            மண் மீதிலே

 

                        கல்வாரியில் நீர்

                        என் பாவம் போக்க

                        உம் ஜீவன் ஈந்தீர்

                        என் அன்பே

 

                        என் நிந்தைமேலே

                        தம் சிந்தை வைத்த

                        மாவிந்தை ஏனோ

                        என்னுயிரே - 2

 

            நான் உம் மடி சேரவே

            நீர் இப்புவி சேர்ந்தீரே

            உம் நீதி எனதாகவே

            என் பாவம் உமதானதே

 

                        எனக்காக பலியானீரே

 

 

https://www.youtube.com/watch?v=uI3WcQ70I5w

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு