நான் உன் மேல் வைத்த அன்பு விலகாதது

நான் உன் மேல் வைத்த அன்பு விலகாதது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        நான் உன் மேல் வைத்த அன்பு விலகாதது

                        நான் மேல் வைத்த சிநேகம் குறையாதது

                        நாணற்போல அசைந்தாடும் வாழ்க்கை வாழந்தாயோ - என்

                        நாமம் தரிக்கப்பட்ட ஜனமே வாசனை இழந்தாயோ

 

1.         ஆதியிலே என்னிடம் வந்த

            அன்பை விட்டாயே - உன்

            ஆனந்ததுதிகள் செலுத்திடவே அனுதினம் வெறுத்தாயே

            ஆசீர்வாதம் தந்தேனே!

            ஆலோசனை கொடுத்தேனே!!

            மறந்து போனாயே நித்தம் விலகிப் போனாயே

 

2.         பாடுகள் நிந்தை நெருக்கும் போது

            பயந்து போனாயோ - உன்

            பாதிப்புகள் நித்தம் பெருகின போது பலவீனன் ஆனாயோ

            பாதை காட்டி வந்தேனே!

            பாசகரத்தால் தொட்டேனே!!

            மறந்து போனாயே நித்தம் விலகிப் போனாயே

 

3.         உலகத்தின் வேஷம் தரித்துக் கொண்டு

            உண்மையைக் கொன்றாயே

            உன் விருப்ப போதனையால் உன்னை நீயும் கெடுத்தாயே

            உருவாக்கி மகிழ்ந்தேனே!

            உதிரம் சிந்தி மீட்டேனே!!

            மறந்து போனாயே நித்தம் விலகிப் போனாயே

 

4.         இஷ்டம் போல அலைந்து திரிந்து

            நேரத்தை வீணடித்தாயே - உன்

            இச்சை என்னும் மோகத்தால் நேசரை விற்றுப் போட்டாயே

            இருளை விரட்டும் வெளிச்சம் நான்!

            இதயத்தை கேட்கும் இயேசு நான்!!

            மறந்து போனாயே நித்தம் விலகிப் போனாயே

           

 

சகோ. பழனி S. சாமுவேல்

 

 

 

https://www.youtube.com/watch?v=qgxaj1KCkCk

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு