நாள்தோறும்
செலுத்துவேன் நன்றி பலி
நாளெல்லாம் பாடுவேன் துதி
பாடல்
நன்றி நன்றி நன்றி
நன்றிபலி
1. இதயத்திலே வாழ்பவரே
இதயமெல்லாம் நிறைவானவரே
கண்மணி போல் காப்பவரே
காலமெல்லாம் எந்தன் நிழலானவரே
2. உயிரினிலே கலந்தவரே
உறவாய் என்னோடு இருப்பவரே
காரிருளை நீக்கிடவே
ஜீவ
ஒளியாய் வந்தவரே
3. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக என்றும் செய்பவரே
நினைவினிலே இருப்பவரே
நித்தியத்திலே
என்னை சேர்ப்பவரே
No comments:
Post a Comment