நன்றி
என்று சொல்லுவோம்
நல்ல
தேவன் கிருபை செய்தார்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி நன்றி இயேசய்யா
1. உங்க ஜீவனை தந்தீர்
உமக்கு நன்றி அப்பா
என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றி அப்பா
சாப நோய்களை
எல்லாம் முறியடித்தீரே
புது வாழ்க்கை தந்து
நல்ல சந்தோஷம்
தந்தீர்
2. பெயர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றி அப்பா
உங்க அன்பை அள்ளி தந்தீர் உமக்கு நன்றி
அப்பா
என்னை வாலாக்காமல்
தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
3. வெண்கல கதவுகள் உடைத்து விட்டீர்
இரும்பு தாழ்பாள்கள்
முறித்து விட்டீர்
நல்ல பொக்கிஷங்களை
நல்ல ஆசீர்வாதத்தை
எனக்கு தந்தீர் அநாதி
பாசத்தால்
4. பரலோகத்தில் என்னை நீர் கொண்டு செல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைத்தீர்
நோய்களும் இல்லை சாப
பேயும் அங்கு இல்லை
பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
https://www.youtube.com/watch?v=vrYCZXksY2M
No comments:
Post a Comment