நல்லவரே
நன்மைகள் செய்தவரே
வல்லவரே என்னை வாழ வைத்தவரே
நன்றி ஐயா உங்களுக்கு நன்றி
ஐயா
ஆராதனை
1. தாயின் கருவினிலே
என்னை தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி நடத்தி வந்தீரே
தூக்கி தூக்கி சுமந்து வந்தீரே-தோள் மீது
2. துயரை மாற்றியே துதியின் உடை
சாம்பல் அகற்றி அழகு தந்தீரே
சஞ்சலங்கள்
நீக்கி விட்டீரே
என்னை சந்தோஷத்தால்
நிரப்பி விட்டீரே
3. சிங்கக் குட்டிகள் பட்டினியாயிருக்கலாம்
தேடும் என்னை போஷிக்கின்றீரே
நன்மை கிருபை தொடரச் செய்தீரே
தினம் நன்மையாலே
முடிசூட்டினீரே
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment