தேவனின்
அன்பு என் தேவனின்
அன்பு
என் உள்ளத்தில்
இன்று வந்தது
- 2
ஆஹா
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் ஆண்டவரை பாடி
மகிழ்வேன்
1. என்னை ஆசீர்வதிக்க
மகிமை துறந்தவரே
என்னை மீட்டுக்
கொள்ள
தன்னை இழந்தவரே
நன்றியாலே
நினைத்து துதிப்பேன்
நாளும்
என்னை அவர்
அன்போடிணைப்பேன்
- ஆஹா
2. காரிருள்
சூழ்ந்து கலங்கி
தவித்த வேளை
கரங்கள்
நீட்டி என்னை
அன்பாய்
அணைத்தீரே
புகழ்ந்து
பாடி துதிப்பேன்
உம் பாதங்களை
என்றும் தொழுவேன்
- ஆஹா
3. சாவின்
பள்ளத்தாக்கினில்
நடந்து
வந்திடினும்
தீங்கு
நெருங்கிடினும்
மறவேன்
ஆண்டவரை
தூக்கியே
நிறுத்தி என்னை
கண்மணி
போல் காத்திடுவார்
- ஆஹா
No comments:
Post a Comment