ஆதி
முதலாக இருப்பவரே
ஆரம்பம்
ஏதும் இல்லாதவரே
ஜோதி
மயமாக இருப்பவரே
கர்த்தாவே...
ஆண்டவரே...
முத்தமிழால் போற்றிடுவேன்
எல்லா மொழியினால் உயர்த்திடுவேன் - 2
உமக்கே முதல் கனம்,
உமக்கே முதல் மரியாதை,
உமக்கே முதல் வணக்கம்,
எல்லா துதிகளும் ஏற்றுக்கொள்ளும்
கர்த்தாவே! ஆண்டவரே!
தேவா நீர் வாழ்க! - (2)
1. ஒருவராக இருப்பவர் தாம் ஒருவரே ஞானமுள்ளவர்
ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்பவர்
- 2
சதாகாலமும் உயிரோடிருக்கும்
தேவனைத் தொழுதிடுவோம்
அவர் நாமம் வாழ்க! அவர் அரசு
வருக!
அவர் சித்தம் நிறைவேறுக!
- 2
தேவா நீர் வாழ்க! - 2
2. சர்வ சிருஷ்டிகர் ஆனவர் சர்வத்தையும் ஆளுகின்றவர்
சேனைகளின் கர்த்தர் என்ற நாமம் உள்ளவர்
- 2
சதாகாலமும் உயிரோடிருக்கும்
தேவனைத் தொழுதிடுவோம்
அவர் நாமம் வாழ்க! அவர் அரசு
வருக!
அவர் சித்தம் நிறைவேறுக!
- 2
தேவா நீர் வாழ்க! - 2
3. தாயின் கருவினில் காத்தவர் உள்ளங்கைகளில்
வரைந்தவர்
இரவு பகலாக என்னை காத்து வருபவர் - 2
சதாகாலமும் உயிரோடிருக்கும்
தேவனைத் தொழுதிடுவோம்
அவர் நாமம் வாழ்க! அவர் அரசு
வருக!
அவர் சித்தம் நிறைவேறுக!
- 2
முத்தமிழால் போற்றிடுவேன்
எல்லா மொழியினால் உயர்த்திடுவேன் - 2
உமக்கே முதல் கனம்,
உமக்கே முதல் மரியாதை,
உமக்கே முதல் வணக்கம்,
எல்லா
துதிகளும் ஏற்றுக்கொள்ளும்
கர்த்தாவே! ஆண்டவரே!
தேவா நீர் வாழ்க! - (4)
- Bro. J. Allen Paul
No comments:
Post a Comment