தோத்திரம் சொல்லி பாடி

தோத்திரம் சொல்லி பாடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஸ்தோத்திரம் சொல்லி பாடி

            இயேசுவை எந்நேரமும் துதிப்போம்

            அல்லேலூயா துதி சொல்லி

            இயேசுவை என்றென்றும் ஆர்ப்பரிப்போம்

 

                        அல்லேலூயா அல்லேலூயா

 

1.         துதிகளின் நடுவினில் வாசம் செய்வார்

            துதிக்கின்ற உள்ளமதை தேடி வருவார்

            துதிகளை நாவினில் நிரம்பச் செய்வார்

            ஸ்தோத்திர பலியினால் மகிமைப்படுவார்

            இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே

            நாம் ஒருமித்து கூடிடுவோம்

 

2.         துதி செய்ய தானே நாமும் பிறந்தோம்

            இதை செய்ய ஏனோ தினமும் மறந்தோம்

            துதியுடன் இசையை முழங்கச் செய்வோம்

            தூதரை விட நாம் எழும்பி துதிப்போம்

            ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே

            துதி பாடி கொண்டாடிடுவோம்

 

3.         தேவனின் நாமம் மகிமைப்படவே

            ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும்

            உதடுகள் கனியே ஸ்தோத்திரப் பலியே

            உயிருள்ளவரையே நாவில் சொல்லியே

            நடனத்திலே புது பாட்டினிலே

            நாம் கர்த்தரை துதித்திடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=r25oIW-WYfM

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு