தேவனே
என் ஜீவனே
எந்தன் கன்மலையே
இயேசுவே
என் நேசரே
என்றுமாய்
நம்புவேன் அல்லேலூயா
4
1. தீமை ஏதும்
சூழ்ந்திடா
என்னைக்
காக்கும் தெய்வமே
சாபம் யாவும்
நீக்கியே
சாந்தியே
நல்கிடும்
- அல்லேலூயா 4
2. என்னை முற்றும்
தந்திட்டேன்
கிருபை
சூழ தாங்குவீர்
எந்தன்
மேன்மை நீரல்லோ
இயேசுவே
பின் செல்வேன்
3. தாகம் தீர்க்கும்
மீட்பரே
எந்தன்
வாஞ்சை நீரல்லோ
உம்மைப்
போல மாறிட
இயேசுவே
செய்திடும் - அல்லேலூயா
4
4. உள்ளம்
திறந்து வேண்டினேன்
என்னை கேட்டு
இரங்குவீர்
தேவ நன்மை
யாவையும்
தேவனே நல்கிடும்
- அல்லேலூயா 4
5. பாரில்
உம்மை தேடினேன்
பயங்கள்
யாவும் நீக்கினீர்
தேவராஜ்யம்
சேர்ந்திட
இயேசுவே
செய்திடும் - அல்லேலூயா
4
- Bro. M. Vincent Samuel
https://www.youtube.com/watch?v=BM5wUl6byRs
https://www.youtube.com/watch?v=a0IfkNDkGZQ
No comments:
Post a Comment