இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
சிங்கார
மாளிகையில்
ஜெயகீதங்கள்
பாடிடுவோம்
சீயோன்
மணவாளனுடன்
1. ஆனந்தம்
பாடி அன்பரைச்
சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம்
- அங்கே
அலங்கார
மகிமையின் கிரீடங்கள்
சூடி
அன்பரில்
மகிழ்ந்திடுவோம்
2. துயரப்பட்டவர்
துதித்துப் பாடுவார்
துதியின்
உடையுடனே - அங்கே
உயரமாம்
சீயோன் உன்னதருடனே
களித்து
கவி பாடுவோம்
3. முள்
முடி நமக்காய்
அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம்
கண்டிடுவோம் -
அங்கே
முத்திரையிட்ட
சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய்
துதித்திடுவார்
4. பூமியின்
அரசை புதுபாட்டாய்
பாடி
புன்னகை
பூத்திடுவோம்
- புது
எண்ணெயால்
அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை
ஒழித்திடுவோம்
5. அவருரைத்த
அடையாளங்களெல்லாம்
தவறாமல்
நடக்கிறதே - அவர்
வரும்
வேளை அறியாதிருப்பதால்
எப்போதும்
ஆயத்தமாயிருப்போம்
6. குருசை
சுமந்த பரிசுத்தர்
முன்னால்
குருத்தோலை
பிடித்திடுவோம்
- அங்கே
கற்புள்ள
கறைபடா கர்த்தரைப்
பின்பற்றினோர்
மீட்பின்
கீதம் பாடுவோம்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment