என் உள்ளம்
நன்றியால் நிறைந்தே
என் தேவனில் மகிழ்ந்திடுதே
- 2
மாறிடா
அடைக்கலம் நீரே
என்றுமே
என் தஞ்சமம்
நீரே - 2
உம் சிறகதின் நிழலில்
மறைத்து
என்னை காத்த நீரே
- 2
நீதியின்
கிரீடமும் கனமும்
நீங்கிடா மறைவிட நிழலும்
- 2
இயேசுவே
நீர் எந்தன் ஜீவனின் ஊற்றே
என்றும்
என் புகழிடமே
1. சேய் போல
என்னையும் சுமந்தே
தாய்போல
அரவணைத்தீரே
- 2
கானமாம்
இந்த புவியில்
கலங்கியே
தவித்த அவ்வேளை - 2
கண்ணுறங்கா
தென்னையே
கருத்துடன்
காத்த நீரே - 2
2. மழைபோல
இன்னல்கள் பெருகி
அலைபோல
சீறி வந்திடினும்
- 2
அளவில்லா
கிருபைகள்
பகர்ந்தே
அசைந்திடா
தென்னையுமே
பத்திரமாய்
- 2
அன்னலை
நிலை நிறுத்தி
அற்புத
ஜெயம் ஈந்தீரே - 2
3. எக்காளம்
தொனித்திடும்
நேரம்
இக்கால
பாடுகள் தீரும்
- 2
ஏகிடுவேன்
உந்தன் சமூகம்
கண்டிடுவேன்
உந்தன் வசனம்
- 2
நீங்கிடா
தென் உள்ளமே
ஆனந்த நாள்
அதுவே - 2
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment