ஒரு
தந்தையைப் போல
தன் தோளின்
மேலே
உன்னை
தூக்கி சுமந்திடுவார்
இயேசு
தூக்கி சுமந்திடுவார்
துணையாக
நின்றிடுவார்
உன் துயரெல்லாம்
துடைத்திடுவார்
1. உள்ளங்கையில்
உன்னை வரைந்தவர்
ஒருபோதும்
மறப்பதில்லையே
உனக்கெதிராய்
வரும் தீமைகள்
ஒன்றுகூட
வாய்ப்பதில்லையே
2. மனிதர்
அன்பு மாறிப் போனதோ
மனிதா நீ
சோர்ந்து போனாயோ
உன்னை மீட்க
தன்னை தந்தவரின்
உண்மை அன்பு
மாறிடாதே
- அவர்
3. கண்ணீர்தான்
உணவானதோ
கவலை தான்
வாழ்க்கையானதோ
கலங்காதே
சகோதரனே (சகோதரியே)
உனக்காக
அவர் மரித்தாரே
- அன்று
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment