கொல்கதாவை நோக்கும் போது

கொல்கதாவை நோக்கும் போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கொல்கதாவை நோக்கும் போது

                        சோகம் முட்டுது

                        கல்வாரியை எண்ணும்போது

                        கண்ணீர் கொட்டுது

                                    யாருக்காய் இந்த பாடுகள்

                                    யாருக்காய் இந்த காயங்கள்

                                    என் பாவம் போக்க மரித்தீர்

                                    என் சாபம் நீக்க மரித்தீர்

 

1.         கெத்சமனே பூங்கா சென்றீரே

            இரத்த வேர்வை சிந்தி நின்றீரே

            சித்தம் தேவ சித்தம் தியாகமல்லவோ

            முத்தம் யூதாஸ் முத்தம் துரோகமல்லவோ

            கண்கள் எல்லாம் ஈரமாகுதே

            நெஞ்செல்லாம் பாரமாகுதே

 

2.         சாரோன் ரோஜா மீது முட்களோ

            முள்முடியில் யூத ராஜனோ

            ஜீவ ஊற்றுக்கிங்கே தாகம் வந்ததோ

            காளான் தொய்ந்த காடி சோகம் தந்ததோ

            காப்பார் காக்க வல்லவா

            மீட்கும் நேசமல்லவா

 

3.         ஒப்புவிக்கும் அன்பை பார்க்கிறேன்

            ஒப்பற்ற உம் நேசம் பார்க்கிறேன்

            இரத்தத்தாலே என்னை மீட்டுக் கொண்டீரே

            கிருபையாலே என்னை ஏற்றுக் கொண்டீரே

            தாழ்த்தி ஒப்படைக்கிறேன்

            என்னை அர்ப்பணிக்கிறேன்

           

           

                       

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு