கானானை சேரப்போறோம் வாறீகளா

கானானை சேரப்போறோம் வாறீகளா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    கானானை சேரப்போறோம் வாறீகளா

                        ஐயா வாறீகளா அம்மா வாறீகளா

                        பாலும் தேனும் ஓடும் நாடாம்

                        பரலோகம் அதுக்குப் பேராம்-2

 

1.         செங்கடல் வழியில் வரும்

            யோர்தானில் கரை புரளும்

            விசுவாசம் இருந்தாலே

            எளிதாக கடந்திடலாம்

            எரிகோ எதிர்த்து நிற்கும்

            எதிரிகளும் சூழ்ந்திடுவார்

            யெகோவா நிசி இருக்க

            பயம் ஏதும் தேவையில்ல

 

                        அல்லேலூயா பாடியே நாம்

                        ஆனந்தமாய் கடந்திடலாம்

 

2.         வனாந்திர வழிகள் உண்டு

            பயந்திட தேவையில்லை

            அக்கினியாய் மேகமாய்

            நம்மோடு வரும் தேவன் உண்டு

            வானத்து மன்னாவால்

            போஷித்திடும் தகப்பனவர்

            கன்மலை பிளந்து

            நம் தாகம் தீர்க்கும் தாயும் அவர்

 

                        அதிசயம் அவர் பெயராம்

                        ஆச்சரியம் அவர் செயலாம்

 

3.         வானத்தில் எக்காளம்

            ஊதிடும் ஓர் நாள் வருதே

            மேகத்தில் தூதரோடு

            இயேசு ராஜா வந்திடுவார்

            நல்லதோர் போராட்டம்

            போராடி ஜெயித்திடுவோம்

            நித்திய ஜீவன் பெற்று

            பரலோகம் சென்றிடுவோம்

 

                        அந்த நாள் நெருங்கிடுதே

                        ஆயத்தம் ஆகிடுவோம்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு