தேனிலும் இனிய வேதத்தோடு

தேனிலும் இனிய வேதத்தோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தேனிலும் இனிய வேதத்தோடு

            அப்பா உம் பாதத்தில் அமர்வது ஆனந்தம்

            கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்

            ஆவியில் பாடுவது பேரின்பம் - ஆமென்

            ஆவியில் பாடுவது பேரின்பம்

 

                        யெகோவாயீரே எல்ஷடாய்

                        யெகோவாயீரே யெகோவா ஷம்மா

                        துதியும் கனமும் உமக்கே

                        மாட்சிமை துதியும் உமக்கே

 

1.         தாவீதை போல இரவும் பகலும்

            வேத தியானம் ஆனந்தம் பேரானந்தம்

            சிங்கத்தின் வாயை கிழித்துப் போட்டு

            துதி கீதம் இசைப்பது பேரின்பம்

 

2.         அக்கினி நடுவே ஆபேத் நேகோ போல

            அவியாமல் நடப்பது ஆனந்தம் பேரானந்தம்

            கொந்தளிக்கும் உலகில் இயேசுவோடு

            கரம் பற்றி நடப்பது பேரின்பம்

 

3.         அதிகாலை துதியில் வாசல்கள் திறப்பது

            உள்ளம் எல்லாம் ஆனந்தம் பேரானந்தம்

            துதியிலே வாழ்பவர் எனக்குள்ளே வாழ்கிறார்

            துதிக்க துதிக்க பேரின்பம்.

 

 

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு