எனக்காய்
யாவும் செய்து
முடித்த
உன்னத
தேவனே
சிலுவையில்
எல்லாம்
செய்து
முடித்தீரே - எனக்காய்
1. என்மேல்
விழுந்த சாபத்தை
நீர் ஏற்றுக்
கொண்டீரே
ஆசீர்வாதம்
என் மேல் வைத்தீரே
பூமியில்
உயர்ந்த இடத்தில்
உயர்த்தி
வைத்தீரே
2. என் மேல்
விழுந்த தரித்திரத்தை
ஏற்றுக்
கொண்டீரே
ஐஸ்வரியவனாய்
மாற்றி விட்டீரே
சகல ஜனங்களுக்குள்
என்னை
உயர்த்தி
வைத்தீரே
3. என் மேல்
விழுந்த வியாதியை
நீர் ஏற்றுக்
கொண்டீரே
நிரந்தர
சுகத்தை தந்துவிட்டீரே
என்னை தழும்புகளால்
குணமாக்கிவிட்டீரே
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment