விசேசமானவள்
நானே
விசேசமானவன்
நானே
தெய்வ
சாயலில் பிறந்த
நான்
விசேசமாளவள்
நானே
1. கண்ணின்
மணி என்றார்
கையில்
வரைந்துள்ளார்
தலையின்
முடியைக்கூட
எண்ணி வைத்துள்ளார்
மீனை கேட்டால்
நான் பாம்பை தருவேனோ
அப்பம்
கேட்டாலும் கல்லை
தருவேனோ
என்று சொன்ன
தேவன் என் தகப்பன்
2. புல்லின்
அழகைப் பார்
பூவின்
நிறத்தைப்
பார்
இவற்றை
உடுத்தி வைக்கும்
தேவன் என் தகப்பன்
பறவை ஒருநாளும்
விதைப்பதில்லை
நாளைய தினத்தின்
கவலை அதற்கில்லை
நான் அவரின்
செல்லப்பிள்ளை.
3. உலகம் முழுவதும்
வார்த்தையில்
படைத்தவர்
என்னை மட்டும்
தன் கைகளினால்
செய்தார்
ஜீவன்
ஊதி சாயல் தந்தார்
ஜீவன்
தந்து மீட்டும்
கொண்டார்
இரத்தம்
சிந்தி எனக்காக
மரித்தார்.
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment