அன்பானவா அருளானவா
மன்னாதி மன்னவா உலகாளவா
எம்மோடு தான் எமதானவா
எப்போதும் எமை ஆளும் மரிபாலகா
தவழும்
இசை அரசை நெஞ்சில் அள்ளிக் கொஞ்சலாம்
விரும்பி
அவர் தரும் பரிசை அள்ளிச் செல்லலாம்
1. வைக்கோலில் கிடந்தாலும்
நிறைவான செல்வம்
நலிந்தோரும் தழைந்தோங்கத் துணை ஈந்ததோ
இங்கே இங்கே வாரும்
இவர் அணைப்பு மட்டும் போதும்
அன்னை மரி மடியினிலே அயந்துறங்கும் தேவன்
அழுத விழி சிரித்திடவே அமைதி தரும் பாலன்
2. எல்லோரும் கொண்டாடும் எளியோரின் தெய்வம்
மண்ணோடு உறவாடும் மனுவானதோ
என்னே என்னே நேசம் அவர் நம் மேல் வைத்த
பாசம்
கடுங்குளிரில் நடு இரவில் பிறந்த மரிபாலன்
இறை அருளில் அகங்குளிர உதித்த மனுவேலன்
No comments:
Post a Comment