ஜீவனுள்ள
என் தேவனே
உம்மைக்
காணவே
உம்மைத்
தேடும் இந்நேரமே
என்முன்
வாருமே!
உந்தன் முகம்
நான் காணவே
உந்தன் குரல்
நான் கேட்கவே
ஆவலாக ஓடி
வந்தேன்
1. என் ராஜனே என் தெய்வமே
உம் சாயலாக நான்
மாறவே
ஆத்துமத்தில்
உம்மை வைத்தே
காத்திருப்பேனே
உம்மைக் காணவே
கண் உறங்காமல்
காப்பவரை
இந்நேரமே
காண நான் வாஞ்சிக்கிறேன்
2. அதிகாலையோ
எவ்வேளையோ
மாநேசரை
தரிசிக்கவே
ஆவலுடன்
ஆயத்தமாய்
மன்னன்
முகம் தரிசிக்கவே
கண்மணி
போல காப்பவரை
என் கண்களால்
காண நான் வாஞ்சிக்கிறேன்
3. உத்தமத்தின்
வழிதனிலே
பக்தியுடன்
நடந்து செல்ல
ஜீவிதத்தில்
நித்தமுமே
சுத்தனாக
என்னை நிறுத்த
ஆரூயிர்
நேசா என்னை
தேடியே
என் உள்ளத்தில்
தங்கியே விட்டாரவர்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment