இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்னைக்
கொண்டு என்ன செய்ய
சித்தமாய்
இருக்கிறீர்.
எங்கு செல்ல
என்ன சொல்ல
சொல்லித்தாரும்
தகப்பனே.
சொல்லி
சொல்லி உம் அன்பை
ருசித்திட
வேண்டும்
பேசி பேசி
உம் அன்பை பகிர்ந்திட
வேண்டும் - 2
1. எனக்கு
நீர் தந்த அபிஷேகம்
அது
நுகங்களை
முறித்திடட்டும்
எனக்கு
நீர் தந்த கிருபை
அது
பிறருக்காய்
பயன்படட்டும்.
மெழுகு
போல நான் உருகி
பிறர்
வாழ்ந்திட
ஒளி தர வேண்டும்.
பிறர் வாழ்ந்திட
ஒளி தர வேண்டும்
- 2
2. பட்சிக்கும்
அக்கினி நீரே
பாவங்களைச்
சுட்டெரித்திடும்
அநியாயத்
தீர்ப்பு நீங்கி
நியாயத் தீர்ப்பு
நிறைவேறட்டும்
உமக்கு
முன்பாக நிற்கும்
பாத்திரமாய்
மாற வேண்டும்.
பாத்திரமாய்
மாற வேண்டும்
- 2
3. நீர் செய்ய
நினைத்த காரியம்
ஒன்றுமே
தடை படாது
பூத்து
குலுங்கும் மரமாய் பிறருக்கு
நிழல்
தர வேண்டும்
தேசம் துளிர் விட்டுச்
செழிக்க உம்
இரக்கம்
வேண்டும் ஐயா
உம் இரக்கம்
வேண்டும் ஐயா
- 2
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment