வானம் திறந்து தேவ மகிமை
பெருமழை போல் ஊற்றிட வாஞ்சிக்கிறோம்
தூய ஆவி என்னை அனலாய்
இன்னும் நிரப்பிட என் உள்ளம் ஏங்கிடுதே
ஜீவ நதியில் மூழ்கி தவிக்க
என்னை முழுவதும் தருகிறேன்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
என் வாழ்வில் எல்லாம் செய்யும்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
முடியாததை முடிய செய்யும்
1. உம் ஆவி ஊற்றப்பட்டால்
மரித்தவை உயிர் பெறுமே
எந்த சூழ்நிலையும் என்னை தள்ளாமலே
காத்திடும் உம் பிரசன்னம்
2. உம் ஆவி ஊற்றப்பட்டால்
தடைகளும் வழி விடுமே
கண்ணீர் கவலைகள் யாவையும்
சந்தோசமாய் மாற்றிடும் உம் பிரசன்னம்
- Ranjith Jeba
https://www.youtube.com/watch?v=nuOe4VeFyU8
No comments:
Post a Comment