நல்ல நண்பன் இயேசு என்னுடன்
என்றென்றும்
வாழ்கிறார்
புல்லுள்ள
இடங்களில்
என்னை
மேய்க்கின்றார்
அமர்ந்த
தண்ணீரண்டை தாகம் தீர்க்கின்றார்
1. தாய்
மறந்தாலும் அவர் மறவார்
தந்தை
வெறுத்தாலும் அரவணைப்பார்
கண்ணின்மணி போல் காத்துக் கொள்வார்
கடைசிவரை
என்னை ஆசீர்வதிப்பார்
2. வானமும்
பூமியும் ஒழிந்தே போகும்
வல்லவர்
துணையோ நிலைத்து நிற்கும்
குன்றுகள்
விலகி மறைந்து போகும்
அவர்
கிருபை மட்டும் நிலைத்து நிற்கும்
3. எதிரிகள்
கண்கள் முன் பந்தி அமைப்பார்
என்
தலை உயர்த்தி அபிஷேகிப்பார்
வெள்ளம்
போல் சோதனை சூழ்ந்திட்டாலும்
தோள்களில்
என்னை அவர் தூக்கி சுமப்பார்
- Vincent Selvakumar
https://www.youtube.com/watch?v=6jFSjXHeI-w
No comments:
Post a Comment