தேவனை
துதிக்கும் புதுப்பாட்டை
எந்தன்
நாவினில்
தினங் கொடுத்தார்
நான்
அதைக் கண்டு பயந்து
நடுங்கி
கர்த்தரை
நிதம் நம்பினேன்
1. பயங்கர
குழியிலும்
உளையான சேற்றிலும்
என்னை தூக்கி
எடுத்து
எந்தன்
கால்களை கன்மலையின்
மேல்
நிறுத்தி
உறுதிப் படுத்தினாரே
2. கர்த்தரை
தன் நம்பிக்கையாக
வைக்கும்
மனிதன் தானே
அவனே பாக்கியவான்
அவனே பாக்கியவான்
வேதம் உரைத்துள்ளதே
3. கர்த்தரோ
என்மேல் நினைவாய்
இருந்து
எந்தன்
துணையானார்
அவரது கிருபையும்
அவரது உண்மையும்
என்னைக்
காக்கின்றதே
No comments:
Post a Comment