நல்ல போர்ச் சேவகனாய்
- வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்
தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளைத் தாங்கிடுவோம்
1. பக்தியோடு வாழ விரும்பும்
பக்தர்கள் யாவருக்கும்
பாடுகள் வரும் என்று
பவுல் அன்று சொல்லி வைத்தாரே - தேவன் தரும்
2. வேதனைகள் வழியாகத்தான்
இறையாட்சியில் நுழைய முடியும்
சிலுவை சுமந்தால்தான்
சீடனாக வாழ முடியும் - தேவன் தரும்
3. துன்பங்களை சுமக்கும்போதெல்லாம்
வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜீவ கிரீடம்
பெற்றுக் கொள்வோம் - தேவன் தரும்
4. இயேசுவின் நாமத்தினிமித்தம்
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
என்று இயேசு சொல்லி வைத்தாரே
அதுதானே நடக்கிறது - தேவன் தரும்
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=fpWZcnvvdMs
No comments:
Post a Comment