உம்மேல்
வாஞ்சையாய்
இருப்பதனால்
என்னை விடுவிப்பீர்
நிச்சயமாய்
உந்தன்
நாமத்தை அறிந்ததினால்
வைப்பீர்
உயர்ந்த அடைக்கலத்தில்
இயேசுவே!
இயேசுவே!
உந்தன்
நாமம் உயர்ந்த
அடைக்கலம் (பலத்த
துருகம்)
நீதிமான்
நான் ஓடுவேன்
ஓடி அதற்குள்
சுகம் காணுவேன்
(2)
1. ஆபத்து
நாளில் கூப்பிடும்
எனக்கு
பதிலளிப்பீர்
வெகு விரைவில்
என்னுடன்
இருந்து தப்புவிப்பீர்
தலை நிமிரச்
செய்திடுவீர்
- இயேசுவே!
2. வேடனின்
கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய்
அணுகாமலே
தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே
என்னை மூடி
மறைத்துக் கொள்வீர்
- இயேசுவே!
No comments:
Post a Comment