ஆயிரம் பதினாயிரம் பேர்களிலும்
சிறந்தவர் என் இயேசு
பூமி அணைத்திற்கும் இராஜாவே
கோடி கோடி ஸ்தோத்திரம்
1. இரக்கத்தில் ஐசுவர்யம் உள்ளவரே
உருக்கம் நிறைந்தவர் நீர்
இருக்கும் இடம் தேடி வந்தீரே
இரட்சிப்பு தந்தவர் நீர்
2. நித்திய ஜீவனை எனக்கு தர
ஜீவனை தந்தவர் நீர்
நிரந்தர அமைதியை நான் பெறவே
நொறுக்கப்பட்டவர் நீர்
3. அன்னாளின் கண்ணீர் துடைத்தவரே
ஆகாரின் துயர் துடைத்தீர்
என் வாழ்வில் இன்னல்கள் அகற்றியதால்
என்றென்றும் ஸ்தோத்திரம் ஐயா
No comments:
Post a Comment