14 March 2026

ஆற்றிக்கொள்ளுவோம் மனதை கிறிஸ்துவினால்

ஞா.கீ:340

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

340. இராகம்: சாவேரி                           ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          ஆற்றிக்கொள்ளுவோம் மனதை;-கிறிஸ்துவினால்

          தேற்றிக்கொள்ளுவோம் மனத்தை.

 

                             அனுபல்லவி

 

            சாற்றரிதான பரன் தோற்ற முடிவில்லானைப்

            போற்றிப் பணிந்து துதித் தேத்தித் திருவருளால் - ஆற்

 

                             சரணங்கள்

 

1.         எண்ணம் கவலைகள் உண்டாம்;-மரித்தோர்க்காக

            ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்;

            கண்ணீர் சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக்

            கலங்கி அழுவதும் உண்டாம்;

            அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்;

            நண்ணி அவரை ஜெபம் பண்ணத் துயரை விட்டு - ஆற்

 

2.         ஏசுவைப் பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த்

            தெழுந்து புறப்படுவார்கள்;

            மாசற்ற தேவன் அவர்கள்-உடனிருக்க

            மகிமை பெற்றிருப்பார்கள்;

            பேச வேண்டுமோ? ஏசு ராஜன் சமுகமதில்

            நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ - ஆற்

 

3.         நித்திய பிதா அவரே; ஆரோக்கியம் அருள்

            நீதிச் சூரியன் அவரே;

            சத்தியம் வழி அவரே; எண்ணம், கவலை;

            சஞ்சலம் தீர்ப்போர் அவரே;

            புத்தியில் உணர்ந்து, தேவ பக்தியுடன் ஜெபம் செய்து

            முக்தியை அடைய மனச்சுத்தி செய்தே அன்பினாலே - ஆற்

 

 

- மரியான் உபதேசியார்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...