ஆத்துமாவே
கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)
நான்
நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே
1. விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான்
- 2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) -
நான்
2. உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம்
- 2
வாதை அணுகாது தீங்கு நேரிடாது - (2) -
நான்
3. பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார்
- 2
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் -
(2) - நான்
4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார்
- நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம்
- 2
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் - (2)
- நான்
5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா - 2
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் -
(2) - நான்
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment