ஆத்துமாவே
ஏன் கலங்குகிறாய்
நேசரை
நோக்கிடுவாய்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தூதர்கள் ஏந்திடுவார்
1. வனாந்திரத்தில் மன்னா தந்தார்
மறைவாக காத்து வந்தார் - 2
இருள் நீக்கி வெளிச்சம் தந்தார்
நாளெல்லாம் நிழலானார் - 2
2. அலையலையாய் பகைவர்களும்
எழும்பியே வந்தாலும்
அதிகாரங்கள் உடையவர் தாம்
ஆண்டவர் நடத்தினாரே
3. நன்மையில் உன் வாழ்வை
இதுவரை நடத்தினாரே
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
இயேசுவில் நிலைத்திடுவாய்
No comments:
Post a Comment