பல்லவி
ஆத்துமமே!
என் உள்ளமே!
ஆண்டவரை
நீ தினம் துதிப்பாய்
அன்பினால்
உன்னை அழைத்தவரை
அனுபல்லவி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
நன்மைகளீந்துன்னை
வளர்த்தவரே - ஆத்துமமே
சரணங்கள்
1. ஜீவனைக்
கொடுத்துன்னை மீட்டவரே - தூத
ஜீவ போஜனம் சொரிந்தீந்தவரே
ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட
ஜீவனால் நிறைந்துன்னைக் காத்தவரே -
ஆத்துமமே
2. நடத்திய
வழிகள் நோக்கிடுவாய் - அவர்
நல்கிய
கிருபைகள் நினைத்திடுவாய்
ஆபத்தில்
அடைக்கலம், ஆறுதல் இன்னலில்
அளித்தவர்
அருமை இயேசுவல்லோ! - ஆத்துமமே
3. பார்வோனின்
சேனைகள் தொடர்ந்த போதும் - உயர்
யோர்தானின்
அலைகள் புரண்ட போதும்
அக்கினி
மேக ஸ்தம்பமாய் நின்றவர்
அரணும்
உன் கேடகமாயிருந்தார் - ஆத்துமமே
4. தூதரும்
அறியாத தூதுகள் ஈந்துன்னைத்
தாசனாய் உயர்த்தினார் தாரணியில்
பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னைத்
தேடிய கரங்கண்டு வாழ்த்திடுவாய்
- ஆத்துமமே
5. ஆவியின்
வரங்கள் ஜொலித்திடவே - புது
ஜீவனின்
ஊற்றுகள் சுரந்திடவே
சுவிசேஷக்
கொடியும் பறந்திடவே உன்னில்
ஜெயதொனி
கீதங்கள் முழங்கிடவே - ஆத்துமமே
No comments:
Post a Comment