பல்லவி
ஆத்துமமே என் உள்ளமே
ஆண்டவரை
ஸ்தோத்தரிப்பாய்
அவர்
செய்த உபகாரங்களை
என்றென்றும்
நீ மறவாதே
சரணங்கள்
1. பாவங்களை
மன்னித்தாரே
நோய்களையும்
குணமாக்கினாரே
பிராணனையும்
பாதுகாத்து
கிருபையினால்
முடி சூட்டினார் - ஆத்துமமே
2. நன்மையினால்
உன் வாயை
நிறைந்தே
ஆசீர் பொழிந்திடுவார்
கழுகினைப்போல்
வயதினையும்
மாற்றிடுவார்
வாலிபமாய் - ஆத்துமமே
No comments:
Post a Comment