105. இராகம்: வராளி ஏகதாளம்
(410)
பல்லவி
ஆச்சரியமான
காட்சியைப் பார்க்கலாம்,
வா, ஆ! கல்
வாரிச்
சிலுவையில் வானவன் தொங்குகின்ற
ஆச்சரியமான
காட்சியைப் பார்க்கலாம், வா
அனுபல்லவி
சூட்சமுறு
தேவ காட்சியாங் கற்பனை
துய்யத்தை நரர்மீறி-மகா
துர்குணப் பேயின் தந்திரத்தினால்
தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்
சுத்தகிறிஸ்தரசன், தேவனுட
சித்தன், அமை சிரசன், மாந்தர்களின்
துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்,
தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற
- ஆ
சரணங்கள்
1. எருசலை நகர் மருவுங் கல்வாரி
என்னப்பட்ட ஒரு மேடு-அதில்
ஏசுக்கிறிஸ் தெனும் நேசமகத்துவன்
எங்களுக்காய்ப்படும் பாடு-மரக்
குருசில் ஏறியே சிரசில் முண்முடி
கொண்டதும் நொந்ததும் நீடு;-அப்போ
கொற்றவன் தன் முகம் சற்றேனுன் காட்டாத
குறையதும் ஒரு பீடு;
குருதி வடியவே, சுருதி முடியவே
பருதி மறையவே திரையுங் கிழியவே,
கொலைஞர் அவமதிக்க,-துஷ்டனாம்
அலகை மனங்கொதிக்க, கசப்புடன்
கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர்?
கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும்
- ஆ
2. பூலோகத்தாரே, இம்மேலான காட்சியின்
புண்ணியத்தை வந்து பாரும்,-தேவ
புத்திரன் பக்கத்தில் குத்துண்டு பாய்கின்ற
புனித ரத்தமும் நீரும்-நம்மை
மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின்
விஸ்தார ஊற்றென்று சேரும்;-அதில்
விழுந்து ஆத்மம் முழுகிப் பாவந் தீ
வினை அகன்றிட வாரும்
சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர்
ஜீவனதிபதி சாவினாலே நம்மைத்
தெய்வ லோகஞ் சேர்க்க-நித்தியமாய்
உய்யும் சுத்தோராக்க, சுத்த பிதா
செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில்
ஜீவன் துடிக்கதத்தம் ஆவி விடுகின்ற - ஆ
- ஜி.யோ
No comments:
Post a Comment