23 March 2026

ஆசீர்வதியும் சுவாமி என்னை

கீ.கை:265

To Download Txt Lyrics file

 

265. இராகம்: சங்கராபரனம்.                                                                     தாளம்: ஆதி

 

                   “என்ன பாக்யம்” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   ஆசீர்வதியும் - சுவாமி என்னை

                   ஆசீர்வதியும்

 

                             அனுபல்லவி

 

            ஆசீர் வதித்தாலே அல்லாது நான்விடேன்

            நேசா நின்வாக்கெல்லாம் நினைத்துஇப் போதேநீர் - ஆசீர்

 

                             சரணங்கள்

 

1.         இயேசா வைப்போலே - சுதந்தரம்

            இழந்தஎன் மேலே

            கூசாது கைவைத்துக் குற்றங்கள் மன்னித்து

            ஆசீர்வ தியுமென் ஆண்டவா, தேவாநீர் - ஆசீர்

 

2.         கவிழ்ந்தே நிற்கின்றேன் - துணிந்தே என்

            காத்தாவை யான்நோக்கேன்

            பவம்நீக்கப் பிணைப்பட்டு பாடுகள் பட்டஎன்

            பரிசுத்த மீட்பரே பவம்நீக்கி என்னைநீர் - ஆசீர்

 

3.         நெஞ்சைநீர் மாற்றும் - வாக்குப்போல்

            நித்தம்காப் பாற்றும்

            கெஞ்சும்என் விண்ணப்பம் கேளும்மா கிருபையாய்

            அஞ்சிகை என்நெஞ்சில் ஆண்டவா தாரும்நீர் - ஆசீர்

 

4.         மாசில்லா வாயன் - நேற்றின்றென்றும்

            மாறாத நேயன்

            ஆ! சிறி யோரைநீர் ஆசீர்வ தித்தீரே

            அவ்வாறே என்னையும் ஆசீர்வ தித்திடும். - ஆசீர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...