ஆசீர்வாதத்தின்
உறைவிடமே
எந்தனுள்ளத்தின் ஆனந்தமே
அப்பனே கிருபை செய்யுமே
அடியார் விண்ணப்பம் கேளுமே
1. ஊற்றும் உமதாவிதனை
ஆவியின் அருள் பிரவாகத்தையே
ஊற்றியே எம்மைத் தேற்றிடுமே
என் பாத்திரம் பொங்கிவடியுதே - ஆசீர்
2. பெந்தெகொஸ்தே நாளின் முன்மாரி
பெய்ய பண்ணின விதமாக
அந்நிய நாளாம் இவ்வேளையிலே
பின்மாரி பெய்யப் பண்ணுமே - ஆசீர்
3. அக்கினி நாவுகள் பிரிந்து
அற்புதங்கள் மிகச் செய்தாரே
அக்கினியால் அடியாரையும்
முற்றும் மறுரூபமாக்கி விடும் - ஆசீர்
4. அப்பா ஆசீர்வதித்திடுமே
முத்திரையாம் ஆவி பெற்றிடவே
அப்போஸ்தலருக்கு கீந்தபடி
அப்பனே அருள் புரிந்திடுமே - ஆசீர்
No comments:
Post a Comment