197. இராகம்: சாவேரி செம்படைதாளம்
பல்லவி
ஆர் இடத்தில் ஏகுவேன் நான்? ஆதரி,
ஐயா,
அனுபல்லவி
தாரகமாய் நீசர்
உற்ற சாபம் மாற்றிட வந்த சகாயா, - ஆர்
சரணங்கள்
1. அலகை[1] மடங்
கவடித் தோட்டின ஜெய கிறிஸ்
தையனே, உனை நம்பினேன்;
மலைவு[2] கொளும்,
எனக்குன் பாதமே கதி அல்லால்,
மற்றொரு துணை இல்லையே, பரனே இனி - ஆர்
2. அணுக ஈனவரை வரவழைக்கும் மனோகரா,
அடியனை அரவணைத்தாள்;
பணிவுடன் உனதடி சேர்ந்து, சரண் புகுந்த
பாவியை நீ கைவிடாமல், அனுக்ரகி - ஆர்
3. முடிவு வரை நடத்தி ஆண்டு ரட்சிக்க எனை
முழுதுமே கை அளித்தேன்;
அடிதொளும் பலவினை சூழ்ந்திடும் பொழுதெல்லாம்
ஆதரிப்பதுனது மேல் உற்ற பாரமே - ஆர்
- ஜாண் பால்மர்
No comments:
Post a Comment