431.
இராகம்: ஸ்ரீரஞ்சினி ஆதி
தாளம்
பல்லவி
ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்(கு)
ஆகப் படைக்கிறேன்
ஆண்டவரே.
அனுபல்லவி
பாவி
எனை மீட்கப் பரலோகத்தை விட்டுப்
பார்
தன்னில் வந்து மா பாடுகள் பட்டதால், - ஆவி
சரணங்கள்
1. பாவத்தைத்
தண்ணீர் போல பருகி வந்தேன்
கோபத்துக்
குள்ளாகிக் கெட்டழிந்தேன்
சாபத்துக்
கேதுவாய்ச் சஞ்சரித்தேன் என்
சாபத்தை
அன்புடன் சகித்தீரே என் நாதா - ஆவி
2. பங்கக்
குருசில் படுத்தீரன்றோ
தங்கத்
திருமேனி தவித்ததன்றோ
தாங்கொணா
வேதனை சகித்தீரன்றோ
ஏங்குதே
என் ஆவி இப்பாடு நினைக்கையில் - ஆவி
No comments:
Post a Comment