சங்கராபரணம் ஆதிதாளம்
பல்லவி
ஆவியை அனுப்பும் ஐயா - அடியார்க்கும
தாவியை
அனுப்பும் ஐயா,
அனுபல்லவி
கூவியழைக்கும் எங்கள் குறைகள் அனைத்தும்
போக
மேவி இவ்விடம் வந்தெம் மீது கருணையாக
- ஆவியை
சரணங்கள்
1. தாகமுள்ளவருக்கு
- ஜீவத் தண்ணீரைத்
தருவேன்
என்று சொன்னீரே!
தாகம்
தீர இனித் தாகமே இல்லாமல்
வேகமாய்
இதயத்தில் ஜீவ நதிகள் ஓட - ஆவியை
2. உலர்ந்த
எலும்புகள் மேல் - உமதாவியை
ஊதியருளுமையா;
கலகத்துப்
போனோம் காய்ந்தே உலர்ந்து போனோம்
பலனேதுமேயிலாத
பாலைவனமே யானோம் - ஆவியை
3. கல்லறைகளிலிருந்து
- கட்டோடு நாங்கள்
கண்
விழித் தெழுந்திடவே
அல்லேலூயா
சொல்லி ஆர்ப்பரித்து முழங்க
நல்ல
சுவிசேடத்தை நாடெங்கிலும் வழங்க - ஆவியை
4. உயிர்ப்பிக்க
மாட்டீரோ - மீளவும் எம்மை
உருவாக்க
மாட்டீரோ?
உயிருள்ள
சபையாக உலகினிலே விளங்கப்
பயிர்மீது
மழை பெய்த பாங்கினைப் போலவே - ஆவியை
5. அன்பு
பொறுமையில்லையே - ஆவியைப் பெற்ற
அருமை
சிறிதும் இல்லையே
இன்பத்
திருமறைதான் எடுத்தே இயம்புகின்ற
ஏழும்
எமது நெஞ்சில் இடம் பெறவும் இல்லையே - ஆவியை
6. ஆதித்
திருச்சபைக்கே - எங்களை மீண்டும்
அழைத்துச்
செல்ல மாட்டீரோ?
வீதியெங்கும்
உமதன்பையே விளைத்திடும்
வினைகளையே
செய்ய வரந்தரமாட்டீரோ? - ஆவியை
7. எங்களை
நொறுக்கும் ஐயா - ஏசையாநீர்
எங்களை
உருக்குமையா!
தங்க
முகச் சாயல் தங்கும் வரையுருக்கி
இங்கித
உருவாக்கி இதயத்தில் ஒளி செய்யும் - ஆவியை
- பொ.ஆ. சத்தியசாட்சி
No comments:
Post a Comment