ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
- 2
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும்
வருபவர்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்
- (2)
ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள்
- (2)
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர் வாழ்க
வாழ்க
இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க
2. எக்காள தொனி முழங்க இப்போது துதியுங்கள்
- (2)
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை துதியுங்கள்
- (2) - ராஜாதி
3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள்
- (2)
அவர் நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள் - (2) - ராஜாதி
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை துதியுங்கள்
- (2)
சுவாசமுள்ள யாவருமே இயேசுவை துதியுங்கள்
- (2) - ராஜாதி
5. நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே -
(2)
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும் என்றென்றும்
நம்பத்தக்கவர் - (2) - ராஜாதி
6. இயேசுவே நம் இரட்சகர் என்று முழங்கிடுங்கள்
- (2)
அவர் நமக்காய் ஜீவன் தந்தார் அவரின் ஆடுகள்
நாம் - (2) - ராஜாதி
7. நடனத்தோடும் தம்புரோடும் நாதனை துதியுங்கள்
- (2)
மத்தளத்தோடும் குழல் ஊதி சப்தமாய் துதியுங்கள்
- (2) - ராஜாதி
-
No comments:
Post a Comment