390.
இராகம்: சங்கராபரணம் ஏக
தாளம்
பல்லவி
ஆனந்தம் கொண்டாடுவோம்-நாம்
அனைவருமே பாடுவோம்-மிக
சரணங்கள்
1. வானவர்
நாதன் மாமறை நூலன்
மண்ணினில்
வந்த மாட்சியைப் பாரும்
ஈனமாம்
கோலம் எடுத்ததை ஓரும்[1]
ஈசனே
உளம் வையும்-மிக - ஆன
2. பாவமாம்
தீய மாமலை போக்க
பாசமே
கொண்டு பாரினில் வந்த
தேவாதி
தேவன் திருவுயர் பாதம்
தினந்தினமே
துதிப்போம்-மிக - ஆன
- ஒய். ஆமோஸ்
No comments:
Post a Comment