482. இராகம்: பியாகடை. தாளம்: சாப்பு.
பல்லவி
ஆ,
ஆ! பூலோக வாழ்வே! அநித்தியம்
அனுபல்லவி
சாகா
வரங் கொண்டு, யார்தான் இப் புவி வந்தார் - ஆ ஆ
சரணங்கள்
1. கதைபோல் வருடங்கள்,
கழியுதே வீணாய்
அதை யோ சித்துனது, ஆத்துமம் பேணாய் - ஆ ஆ
2. புகைபோல் பறக்குதே
புகலற்ற வாணாள்
திகையா தேசு பாதம் தேடிக்கொள் இந்நாள். - ஆ
ஆ
3. தனமோ பல சொத்துப் பணம் வண்டி ரோதை
மனமோ அதில்
வைப்போன், மதியற்ற பேதை - ஆ ஆ
4. புல்லோ புல்லின் கண் பூவோ
இவ்வாணாள்
கல்லோ அதையுற்றுக் கவனிப்பா யானால் - ஆ ஆ
5. சிறுகால் மனைமக்கள், சேர்க்கை யோர்சந்தை
ஒருகால் உலைந்திடும்,
உனக்கென்ன விந்தை - ஆ ஆ
No comments:
Post a Comment